திருக்குறள்

வலைப்பதிவு காப்பகம்

21 ஏப்., 2009

ஈழம் நேற்றும் இன்றும் எனும் மக்கள் தொலைகாட்சி தொடரில் தலைப்பு(title song) பாடல் –எழுதியவர் திரு.பச்சியப்பன்


என் இனிய சொந்தங்களே ,வாழ்வது ஒருமுறை ,பாமக பாமரன் இத்துடன்தனது இயக்க பணிகளை மீளாத்துயரோடு நிறுத்திவிடுகிறேன் (பாமக களம் காணாமல் ,ஈழம் நோவதைக்கண்டு )

ஈழம் நேற்றும் இன்றும் எனும் மக்கள் தொலைகாட்சி தொடரில் தலைப்பு(title song) பாடல் –எழுதியவர் திரு.பச்சியப்பன்

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே

வெடி விழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காய்ந்த குளம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி படிந்த சிறு முற்றம்

இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வழிந்த குழந்தை பொம்மை
தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய………………சம்மதமோ…………..

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே

விளக்கேற்றிய மாடமெல்லாம்
வீழ்ந்து போனதோ…………..

ஊஞ்சலாடிய கம்பு இல்லை
நீந்தி பழகிய ஆறு இல்லை

என் தோப்பினுள் அலைந்த
பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற
தாய்பூனை என்ன ஆனதோ

முற்றம் தெளித்திட
விடியல் வருமோ
அர்த்த சாமத்தில்
வாழ்வு முடியுமோ


நன்றி திரு .மது

http://gkmadhu.blogspot.com/2009/02/title-song.html

கருத்துகள் இல்லை: