திருக்குறள்

வலைப்பதிவு காப்பகம்

6 ஏப்., 2009

பா.ம.க.,வை வீழ்த்த வால்லாதிக்க நரிகள்




நீண்ட யோசனைக்குப் பின், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து ஏழு இடங்களை பா.ம.க., பெற்றது. பா.ம.க., எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் அதை தோல்வி அடையச் செய்ய வடமாநில வர்த்தக சக்திகள் சில தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் செல்லும் இடங்களில் எல்லாம் "மது எதிர்ப்பு' பிரசாரம் செய்து வருகிறார். இதனால் அரசுக்கு நெருக்கடியும், பிரபல மது தயாரிப்பு நிறுவனங்களுக்கு தொழில் ரீதியிலான பாதிப்பும் உருவாகிறது. மத்திய அமைச்சர் அன்புமணி, புகை பிடிக்கும் தடை சட்டத்தை கொண்டு வந்தார். இதனால் வடமாநிலங்களைச் சேர்ந்த பிரபல சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தந்தையும், மகனும் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதால், கடும் அதிருப்திக்கு ஆளான புகை மற்றும் மது தயாரிப்பு நிறுவனங்கள், நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தன. லோக்சபா தேர்தலை சந்திக்க அந்த சக்திகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.உளவுத் துறைக்கும் இதுகுறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில், அக்கட்சி வேட்பாளருக்கு எதிராக வடமாநில சக்திகளின் பணம் பல கோடிகள் புரளும் என கூறப்படுகிறது.
நன்றி :தினமலர் 0௬/0௪/௨00௯



பாமரனின் முக்கிய வேண்டுகோள் :தேர்தல் திருவிழாவில் மது ,புகையை குடிக்காதிர் ,குடியை கேடுக்காதிர் ,வால்லாதிக்க நரிகள் வந்து நிதி கொடுத்தால் வாங்கிக்கொண்டு வாக்குபெட்டியில் நீதியை மாங்கனிக்கு செலுத்துங்கள்

கருத்துகள் இல்லை: