திருக்குறள்

வலைப்பதிவு காப்பகம்

14 ஏப்., 2009

தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
















கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுங்கள் : தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

அன்புள்ள பாட்டாளி சொந்தங்களே ,
வணக்கம்


நமது கட்சி அ.தி.மு. க.,வுடன் கூட்டணி சேரவேண்டும் என்று நீங்கள் விரும்பிய வண்ணமே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதை அறிவீர். கூட்டணியில் ம.தி.மு.க., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., இன்னும் பிற கட்சிகள் இணைந்திருப்பது நமக்கு மேலும் வலு சேர்க்கிறது.இந்தத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏழு தொகுதிகளில் பா.ம.க., வேட்பாளர்களும், மற்ற 33 தொகுதிளில் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்த 33 தொகுதிகளிலும் பா.ம.க., வேட்பாளர்களே போட்டியிடுவதாகக் கருதி, நீங்கள் தொய் வில்லாமலும், சோர்வில் லாமலும் கடினமாக உழைத்து நமது கூட்டணிக் கட்சிகளின் வேட்பா ளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.ஒவ்வொரு ஓட்டுச்சாவடி வாரியாகவும், ஒன்றிய, நகர வாரியாகவும் நமது கூட்டணி வேட்பாளர்களுக்குக் கிடைத்த ஓட்டு எண்ணிக் கையை தனித்தனியாகப் பார்க்க உள்ளேன். எங்கும் ஓட்டுக்கள் குறையக்கூடாது. தேர்தல் பிரசாரப் பணியில் நீங்கள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி பணி தடையில்லாமல் நம் கட்சியின் பெருமை மிக்க மரபுகளைக் காக்கும் வகையில் நீங்கள் தோழமைக் கட்சியினருக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்கி, மற்றவர்களைவிடச் சிறப்பாகப் பாடுபட்டு வெற்றிக் கனியைப் பறித்துத்தர வேண்டும்.

கூட்டணிக் கட்சி வேட்பாளர்களிடமிருந்து வாகனம், தொகை, வேறு பிற தேவைகள் என அவர்களைத் தொந்தரவு செய்யாமல் உங்களிடமுள்ள குறைந்த வசதி வாய்ப்புகளைக் கொண்டேனும் நிறைவான வகையில் நீங்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும்.தங்கள் கட்சியினரைவிட பா.ம.க.,வினரே சிறப்பாகத் தேர்தல் பணிகளை நிறைவேற்றி, வெற்றியைத் தேடித் தந்தனர் என்று பாராட்டும் படியாக உழைப்பர் என எதிர்பார்க்கிறேன்.


இப்படிக்கு

உங்கள் உண்மையுள்ள

மருதத்துவர் .ச.ராமதாசு

பாமாக நிறுவனர்

திண்டிவனம்.

கருத்துகள் இல்லை: